International07 May 2026

ஹிஸ்புல்லாவின் உயர்மட்ட தளபதியை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதல்!

லெபனானின் பெய்ரூட் நகரில் ஹிஸ்புல்லா அமைப்புடன் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, இஸ்ரேல் நேற்று (6) முதல் முறையாக வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ஹிஸ்புல்லாவின் உயரடுக்கு ரத்வான் படையின் தளபதி இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலில் அந்தத் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதிலும், இஸ்ரேலிய இராணுவமோ அல்லது ஹிஸ்புல்லாவோ அதனை உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.

இந்தத் தாக்குதல் அமெரிக்கா - ஈரான் சமரசத்தின் ஒரு பகுதியான போர் நிறுத்தத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

லெபனானின் தென்பகுதியில் தாக்குதல்கள் தொடர்வதால், ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்தநிலயைில், ஜெலயா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, லெபனான் பிரதமர் நவாப் சலாம் மற்றும் ஜனாதிபதி ஜோசப் அவுன் ஆகியோர், இஸ்ரேலுடன் உயர்மட்ட சந்திப்பு நடத்துவதற்கு இது சரியான தருணம் அல்ல எனக் கூறியுள்ளனர்.

மேலும், இஸ்ரேலிய படைகள் திரும்பப் பெறுவதற்கான கால அட்டவணையே தற்போதைய தேவை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 2ஆம் திகதி தொடங்கிய இந்த மோதலில் லெபனானில் 2,700-க்கும் மேற்பட்டோரும், இஸ்ரேல் தரப்பில் 17 வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes