General07 May 2026

நீலகாமம் சம்பவத்துக்கு நாமல் கடும் கண்டனம்: உடனடி விசாரணைக்கு வலியுறுத்து

கஹவத்தை, நீலகாமம், பகுதியில் பெருந்தோட்டத் தொழிலாளி ஒருவரின் வீடு இடிக்கப்பட்டு, அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு நாமல் ராஜபக்ஷ தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ள அவர், எவரும் தமது வீட்டை இழக்க நேரிடும் என்ற அச்சத்திலோ அல்லது வன்முறையை எதிர்கொள்ளும் பயத்திலோ வாழ வேண்டிய நிலை இருக்கக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மலையக மக்கள் பல தலைமுறைகளாக நாட்டுக்குப் பெரும் பங்களிப்பை வழங்கிய போதிலும், இன்றும் அவர்கள் பாதுகாப்பு, மரியாதை மற்றும் சொந்த வீடு போன்ற அடிப்படை உரிமைகளுக்காகக் காத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அரசாங்கம் தாமதமின்றி தலையிட்டு, வெளிப்படையான விசாரணைகளை நடத்திப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வீடமைப்பு மற்றும் காணி உரிமைகள் போன்ற நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் இனிமேலும் தாமதிக்க முடியாது என்பதையே இந்தச் சம்பவம் நினைவூட்டுவதாகவும், ஒரு சமூகம் பின்தங்கிய நிலையில் இருந்தால் நாடு முன்னேற முடியாது என்றும் நாமல் ராஜபக்ஷ பதிவிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes