General07 May 2026

அவசரகால நிலையை நீடிப்பதற்கான தீர்மானம் 139 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது!

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசரகால நிலையை நீடிப்பதற்கான தீர்மானம் 139 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று கூடியது.

இதன் போது பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 145 வாக்குகள் கிடைத்தன.

எதிராக 06 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டன.அதற்கமைய குறித்த சட்டத்தின் கீழான தீர்மானம் 139 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes