General07 May 2026

மட்டக்களப்பு வாவியில் மிதந்த இருவரின் உடலங்கள் : கொலையா? தற்கொலையா? - காவல்துறையினர் தீவிர விசாரணை

மட்டக்களப்பு வாவியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு வாவியிலிருந்து இன்று (மே 7) இரண்டு ஆண்களின் உடலங்கள் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு காவல்துறையினர் உடலங்களை மீட்டுள்ளனர் . உடலங்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes