General07 May 2026

"யாரிடம் போய் முறையிடுவது?" - தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலால் நாடாளுமன்றத்தில் மனோ கணேசன் எம்.பி ஆவேசம்!

தோட்டத்தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றமைக்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

"மாத்தறை, காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களில் வாழும் எமது பெருந்தோட்ட மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த அநீதி குறித்து நாம் யாரிடம் கூற முடியும்? அரசாங்கத்திடம் தானே கூற முடியும். தயவு செய்து இதனை அரசியலாக்க வேண்டாம். இது மக்களின் பாதுகாப்பு சார்ந்த வாழ்வாதாரப் பிரச்சினை."

கடந்த மே மாதம் 5 ஆம் திகதி மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதேபோல் நுவரெலியா பகுதிகளிலும் அண்மைக்காலமாக வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இத்தகைய சூழலில், தோட்ட நிர்வாகங்கள் மற்றும் வெளியாட்களின் அச்சுறுத்தலில் இருந்து மக்களுக்கு அரசாங்கம் உடனடி பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
Related recommendation
Hiru TV News | Programmes