முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் உட்பட மூவர் உயிரிழப்பு
நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதில் பயணித்த பாடசாலை மாணவர் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று (04) காலை 6:45 மணியளவில் குறித்த முச்சக்கரவண்டி மாபாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
பிரதான வீதிக்கு அருகில் இருந்த இந்த பெரிய மரம் முறிந்து வீழ்ந்ததில் முச்சக்கரவண்டியில் இருந்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அதன் சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
இந்த விபத்தையடுத்து நாவலப்பிட்டி காவல்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றியதுடன், உயிரிழந்தவர்களின் உடலங்களை நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.
நெடுங்காலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இந்த மரத்தை வெட்டி அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை அறிவித்தும், அதற்கு முறையான தீர்வு வழங்கப்படாதமையினாலேயே இந்த துரதிர்ஷ்டவசமான விபத்து நேர்ந்துள்ளதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
விபத்து குறித்து நாவலப்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Latest News
ஹொரண முதியோர் இல்லத் தீ விபத்து: மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு
Local
04 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
04 June 2026
சதொச ஊடாக 25 அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய அமைச்சு தீர்மானம்
Local
04 June 2026
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் இரட்டைப் போக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கண்டனம்!
Local
04 June 2026
மட்டக்குளியில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ், ஹெரோயினுடன் ஒருவர் கைது
Local
04 June 2026
இலங்கையில் ஐந்து சிறுவர்களில் ஒருவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிப்பு
Local
04 June 2026
இலங்கையில் இன்று சரிந்தது தங்கத்தின் விலை! நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!
Local
04 June 2026
இந்தியாவின் பணக்கார முதல்வர்கள் பட்டியல் வெளியீடு : தமிழக முதலமைச்சர் விஜய் மூன்றாமிடத்தில்!
Local
04 June 2026
அரச அதிகாரிகளின் எரிபொருள் கொடுப்பனவைத் திருத்துமாறு நிதி அமைச்சிடம் கோரிக்கை
Local
04 June 2026
முடிவுக்கு வருகிறதா சூர்யகுமார் யாதவின் தலைமைத்துவக் காலம்?
Local
04 June 2026