General06 June 2026

ரஷ்யா மீது யுக்ரைன் நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதல்!

யுக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யப் பகுதிகளை இலக்கு வைத்து உக்ரைன் ராணுவம் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய ஆளில்லா வானூர்தி (ட்ரோன்) தாக்குதலை நடத்தியுள்ளது.

ரஷ்யாவின் வான் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற நூற்றுக்கணக்கான உக்ரைனிய ஆளில்லா வானூர்திகளை ரஷ்ய வான் பாதுகாப்புப் படையினர் அதிரடியாகச் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

இதில் குறிப்பாக லெனின்கிராட் (Leningrad) பிராந்தியத்தில் மட்டுமே 140-க்கும் மேற்பட்ட ஆளில்லா வானூர்திகள் அழிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes