General09 June 2026

கொழும்பில் திரண்ட எதிர்க்கட்சிகள்- கூடாரத்தை காவல்துறை அகற்றியதால் பதற்றம்!

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று காலை சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் தற்காலிக கூடாரத்தை காவல்துறை அகற்றியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேக்கு எதிராக முன்னெடுக்கப்படும் மனிதாபிமானமற்ற மற்றும் அநீதியான நடவடிக்கைகளைக் கண்டித்து இந்த சத்யாகிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல்வாதிகள் பலரும் இன்றைய தினம் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக போராட்டக்காரர்களால் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரத்தை காவல்துறை அகற்ற முற்பட்டது.

இதனையடுத்து, இருதரப்புக்கும் இடையே இந்த தள்ளுமுள்ளு மற்றும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும், இறுதியில் அந்த தற்காலிக கூடாரம் காவல்துறையினரால் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.

பின்னர், போராட்டக்காரர்கள் கூடாரத்தை அமைப்பதற்கு பாரிய பிரயத்தனங்கள் மேற்கொண்டிருந்த போதிலும், அந்த முயற்சிகளும் காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், தற்போது, கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

May be an image of one or more people and text that says 'HARAGAMA LAND'May be an image of one or more people and text

May be an image of one or more people, crowd and text
Related recommendation
Hiru TV News | Programmes