General12 June 2026

செம்மணியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் என்புக்கூடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 07 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 23ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் நடைபெற்றது.

இன்றைய அகழ்வின் போது 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

அதனடிப்படையில் 353 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 334 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes