General13 June 2026

பருத்தித்துறையில் காணாமல் போன சிறுவன் உடலமாக மீட்பு

பருத்தித்துறை - புலோலி தெற்கு பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து சிறுவனின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 6 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவனின் காணாமல்போனமை தொடர்பில் காவல்துறையினருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சிறுவன் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes