2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வாரத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே சூரியன் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
விடைத்தாள்கள் திருத்தப்பட்டு பெறுபேறுகள் ஒழுங்கமைக்கப்பட்டு இறுதி கட்டப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, அடுத்தவார நிறைவுக்குள் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளுக்கான பாடத்திட்டங்களை உரிய காலத்திற்குள் நிறைவு செய்வது தொடர்பாக கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் அதிபர்கள், சிரேஷ்ட கல்வி அதிகாரிகளுக்கு,கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ஏதேனும் ஒரு பாடசாலையில் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் தாமதங்கள் காணப்படின், முறையான முன் திட்டமிடல் மூலம் அல்லது தேவைப்படின் மேலதிக நேரத்தை ஒதுக்கியாவது பாடத்திட்டங்களை முழுமையாக கற்பித்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கல்வி நாட்காட்டியின்படி ஏற்கனவே திட்டமிடப்பட்ட திகதிகளிலேயே 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மாணவர்கள் பரீட்சைகளுக்குத் தங்களை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்வதை உறுதி செய்யும் வகையில், பாடசாலைகள் உரிய பாடத்திட்டங்களை விரைந்து பூர்த்தி செய்ய வேண்டும் என செயலாளர் நாலக கலுவெவ தனது அறிவித்தலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
விடைத்தாள்கள் திருத்தப்பட்டு பெறுபேறுகள் ஒழுங்கமைக்கப்பட்டு இறுதி கட்டப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, அடுத்தவார நிறைவுக்குள் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளுக்கான பாடத்திட்டங்களை உரிய காலத்திற்குள் நிறைவு செய்வது தொடர்பாக கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் அதிபர்கள், சிரேஷ்ட கல்வி அதிகாரிகளுக்கு,கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ஏதேனும் ஒரு பாடசாலையில் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் தாமதங்கள் காணப்படின், முறையான முன் திட்டமிடல் மூலம் அல்லது தேவைப்படின் மேலதிக நேரத்தை ஒதுக்கியாவது பாடத்திட்டங்களை முழுமையாக கற்பித்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கல்வி நாட்காட்டியின்படி ஏற்கனவே திட்டமிடப்பட்ட திகதிகளிலேயே 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மாணவர்கள் பரீட்சைகளுக்குத் தங்களை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்வதை உறுதி செய்யும் வகையில், பாடசாலைகள் உரிய பாடத்திட்டங்களை விரைந்து பூர்த்தி செய்ய வேண்டும் என செயலாளர் நாலக கலுவெவ தனது அறிவித்தலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Latest News
பிரேசிலில் இரு வானூர்திகள் நடுவானில் மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு
Local
15 June 2026
ஜூன் 19 இன் பின் அதிவேக நெடுஞ்சாலைகளில் விசேட சோதனை - பின்னிருக்கை ஆசனப் பட்டி கட்டாயம்!
Local
15 June 2026
சர்வதேச சந்தையில் அதிகரித்த தங்கம் மற்றும் வெள்ளி விலை
Local
15 June 2026
டெங்கு நோயாளர் முகாமைத்துவம் - சுகாதார அமைச்சினால் புதிய மருத்துவ வழிகாட்டுதல்கள் வெளியீடு
Local
15 June 2026
இலங்கைக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள் அணி
Local
15 June 2026
சுங்கத்தீர்வை செலுத்தாமல் கடத்தப்பட்ட பொருட்கள் மீட்பு: நாரம்மலையில் ஒருவர் கைது
Local
15 June 2026
ஈக்குவடோரை 1-0 என வீழ்த்தி கோட் டி ஐவோரி அணி வெற்றி
Local
15 June 2026
இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் கட்டாயம்
Local
15 June 2026
நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை
Local
15 June 2026
இலங்கையில் புதிய வடிவில் பரவும் டெங்கு வைரஸ்
Local
14 June 2026