International16 June 2026

இஸ்லாமாபாத்தில் ஒவ்வொரு 4 வீடுகளிலும் ஒரு சிறுவர் தொழிலாளி: பாகிஸ்தானில் அதிர்ச்சித் தகவல்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் சிறுவர் வீட்டுத் தொழிலாளர்களைத் தடுப்பதற்கான சட்டங்கள் 2020 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலிருந்த போதிலும், தற்போதும் அங்குள்ள ஒவ்வொரு நான்கு வீடுகளிலும் ஒரு சிறுவர் தொழிலாளியாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆசியா ஆரிஃப், 2026 ஆம் ஆண்டுக்கான உலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்புத் தின விசேட நிகழ்வில் இந்த விபரங்களை வௌியிட்டுள்ளார்.

உற்பத்தி விநியோகச் சங்கிலிகள், உணவகங்கள், வாகனத் திருத்தகங்கள் மற்றும் செங்கல் தொழிற்சாலைகள் ஆகிய துறைகளில் சிறுவர் உழைப்புச் சுரண்டல்கள் அதிகமாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்புச் சட்டங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு அமைய, தரமான கல்வியை வழங்குவதன் மூலமே சிறுவர் உழைப்பை ஒழிக்க முடியும் என வலியுறுத்திய அவர், தற்போது பாகிஸ்தானில் 26.2 மில்லியன் சிறுவர்கள் பாடசாலைக் கல்வியை இழந்துள்ளனர் என்றும் கவலை வௌியிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes