General17 June 2026

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி - இதுவரை 380 என்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துப்பாத்தி மனிதபுதைகுழியில் இருந்து இன்று (17)  14 என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன.

மனித புதைகுழியிலிருந்து ஏற்கனவே வெளிப்பட்ட என்புக்கூடுகளில், குழந்தை ஒன்றும் சிறுவர் ஒருவருடையதுமாக, 05 என்புக்கூடுகள் இன்று அகழ்ந்து வெளியில் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மனித புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக, பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி எஸ்.நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 27ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய அகழ்வு பணிகளின் போது, என்புக்கூடொன்றின் இடுப்பு பகுதியில் ஒரு இரும்பு வளையம் ஒன்று சான்று பொருள் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிறுமி ஒருவருடைய பிளாஸ்ரிக் காப்பை ஒத்த பொருள் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது

அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 380 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 362 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மனித புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக, பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி எஸ்.நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.
Related recommendation
Hiru TV News | Programmes