General20 June 2026

பதுளை - நானுஓயா தொடருந்து சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

நானுஓயாவிலிருந்து பதுளை வரையிலான தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பதுளையிலிருந்து அம்பேவலை வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த தொடருந்து சேவைகள் இன்று (20) முதல் நானுஓயா வரை நீடிக்கப்பட்டுள்ளது.

டிட்வா சூறாவளி, மண்சரிவினால் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்ட மலையக தொடருந்து மார்க்கம் பயணிகளின் நலன் கருதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

'டிட்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட சேதங்களால் இந்த தொடருந்து வழித்தடத்தில் தொடருந்து சேவைகள் இதற்கு முன்னர் பதுளையிலிருந்து அம்பேவலை வரையிலான பகுதிகளுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தன இதற்கமைய, இன்று முதல் பதுளையிலிருந்து நானுஓயா வரை தினசரி 4 தொடருந்து பயணங்களை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வருட இறுதிக்குள் மலையக தொடருந்து பாதை கொழும்பிலிருந்து பதுளை வரை இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரராச்சி மற்றும் சிரேஷ்ட மாவட்ட தொடருந்து நிர்வாகப் பொறியியலாளர் தனுஷ்கா ஆகியோர் தெரிவித்தனர்.

மேலும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்ட தொடருந்து சேவையில் நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கி பயணிப்பதற்கு ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வருகை தந்து பயணத்தை தொடங்கினர்.
Related recommendation
Hiru TV News | Programmes