எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களில், அதிக பாதிப்புள்ள 600 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழைக் காலம் காரணமாக வேகமாகப் பரவி வரும் டெங்கு அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் இந்த கலந்துரையாடலில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன், அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த சுற்றறிக்கைகளை உடனடியாக வெளியிடுதல், முப்படைகளின் தலைமையில் விசேட கண்காணிப்புப் பிரிவு ஒன்றை நிறுவுதல், டெங்கு பெருகும் இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்குதல் ஆகிய தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.
அதேநேரம், தற்போது பிரதேச மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள 'சமூக சக்தி' மற்றும் மக்கள் பாதுகாப்பு குழுக்கள் மூலம் டெங்கு ஒழிப்பு பணிகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தற்போது பாடசாலைகள், தொழிற்சாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் போன்றன டெங்கு நுளம்புகள் பெருமளவில் பெருகும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், அந்த இடங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்படவுள்ளன.
அத்துடன், அவ்வப்போது ஏற்படும் இவ்வாறான டெங்கு பரவல் நிலைகளைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நீண்டகால நடவடிக்கைகள் குறித்தும் இந்த கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழைக் காலம் காரணமாக வேகமாகப் பரவி வரும் டெங்கு அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் இந்த கலந்துரையாடலில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன், அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த சுற்றறிக்கைகளை உடனடியாக வெளியிடுதல், முப்படைகளின் தலைமையில் விசேட கண்காணிப்புப் பிரிவு ஒன்றை நிறுவுதல், டெங்கு பெருகும் இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்குதல் ஆகிய தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.
அதேநேரம், தற்போது பிரதேச மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள 'சமூக சக்தி' மற்றும் மக்கள் பாதுகாப்பு குழுக்கள் மூலம் டெங்கு ஒழிப்பு பணிகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தற்போது பாடசாலைகள், தொழிற்சாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் போன்றன டெங்கு நுளம்புகள் பெருமளவில் பெருகும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், அந்த இடங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்படவுள்ளன.
அத்துடன், அவ்வப்போது ஏற்படும் இவ்வாறான டெங்கு பரவல் நிலைகளைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நீண்டகால நடவடிக்கைகள் குறித்தும் இந்த கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Latest News
ஜூலைக்குள் ‘வர்த்தகத்திற்கான தேசிய ஒற்றைச் சாளரம்’ செயல்பாட்டுக்கு வருகிறது!
Local
22 June 2026
3 நாட்களுக்கு 600 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!
Local
22 June 2026
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டம் அறிமுகம்: ஜனாதிபதி அறிவிப்பு
Local
22 June 2026
இலங்கையில் மே மாதத்தில் பணவீக்கம் 5.4 சதவீதமாக அதிகரிப்பு!
Local
22 June 2026
பயனடைந்தவரே குற்றவாளி: அருட்தந்தை சிறில் காமினியிடம் உதய கம்மன்பில 10 கேள்விகள்!
Local
22 June 2026
ஈரானிய மசகு எண்ணெய் விற்பனைக்கு 60 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி!
Local
22 June 2026
இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!
Local
22 June 2026
அஸ்வெசும இரண்டாம் கட்டப் பயனாளர்களுக்கான ஜூன் மாத கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!
Local
22 June 2026
வீழ்ச்சியை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!
Local
22 June 2026
தொழிற்கட்சித் தலைவர் - பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதை உறுதி செய்தார் எண்டி பர்ன்ஹாம்
Local
22 June 2026