களுத்துறை வடக்கு பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் வைத்து 10 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற்ற காவல்துறை பரிசோதகர் ஒருவர், கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் களுத்துறை தெற்கு காவல்துறை நிலையத்தின் கீழ் இயங்கும் களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த (SCIB) காவல்துறை பரிசோதகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வாகனப் புலனாய்வு விசாரணை ஒன்றில் குற்றவியல் குற்றச்சாட்டுகள் இன்றி சாதாரண முறையில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து, வாகனத்தை விடுவிப்பதற்காக ஒருவரிடமிருந்து இவர் 11 இலட்சம் ரூபாயை கையூட்டலாக கோரியுள்ளார்.
இதில் முதற்கட்டமாக கடந்த மே 30ஆம் திகதி ஒரு இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்ட நிலையில், நேற்று இரவு எஞ்சிய 10 இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்ட போது கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட காவல்துறை பரிசோதகர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளார்.
Latest News
சீகிரிய நுழைவாயிலுக்கு முன்பாக காட்டு யானைத் தாக்குதலிலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய வெளிநாட்டுப் பெண்கள்
Local
23 June 2026
செங்கோலைக் கைப்பற்ற முயன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் - சபை அமர்வில் பதற்ற நிலை
Local
23 June 2026
6 பிரதமர்களைக் கடந்து 10 டவுனிங் வீதியில் கம்பீரமாகத் தொடரும் லாரி பூனை!
Local
23 June 2026
சேவை ஏற்றுமதி மூலம் 5 பில்லியன் டொலர் வருமானத்தை இலக்கு வைக்கும் இலங்கை
Local
23 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
23 June 2026
மாணவர்களின் பாதுகாப்பிற்கு அதிபர்களே முழுப் பொறுப்பு: மூடிமறைத்தால் கடும் நடவடிக்கை - கல்வி அமைச்சு எச்சரிக்கை!
Local
23 June 2026
வரலாறு காணாத சுற்றுலா வளர்ச்சி - வருமானத்தில் எதிர்பாராத அதிர்ச்சி
Local
23 June 2026
நாடாளுமன்ற அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு
Local
23 June 2026
டெங்கு அபாய எச்சரிக்கை: 14 மாவட்டங்களில் 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக அறிவிப்பு
Local
23 June 2026
கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையின் இன்றைய நிலவரம்!
Local
23 June 2026