இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய (NCR) பகுதிகளில் கடுமையான தூசிப்புயல் வீசியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கை அறிவித்துள்ளனர்.
தூசிப்புயலின் தாக்கத்தால் பல பகுதிகளில் பார்வைத்திறன் குறைந்ததுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சில பகுதிகளில் இலேசான மழை பெய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், தென்மேற்கு பருவமழை படிப்படியாக வட இந்தியாவை நோக்கி முன்னேறி வருவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் பரவலான மழை நிலை உருவாகும் வரை கடுமையான தூசிப்புயல், பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை நிலைமைகள் தொடரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்கவும், வானிலை அறிவிப்புகளை அவதானமாகப் பின்பற்றவும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Latest News
சித்துபாத்தியில் இதுவரை 409 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு; பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்
Local
23 June 2026
இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும்: ஓமான் மற்றும் ஈரான் கூட்டாக அறிவிப்பு
Local
23 June 2026
ஆட்பதிவு திணைக்கள அதிகாரிகளின் பெயரில் புதிய வட்ஸ்அப் மோசடி!
Local
23 June 2026
சாதனையாளர்களுக்கு தேசிய அங்கீகாரம் - ரோஹித், மாதவனுக்கு பத்ம ஸ்ரீ விருது
Local
23 June 2026
அரச வாகன துஷ்பிரயோகம்: பௌசிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
Local
23 June 2026
வாயால் உணவருந்த மறுப்பதே சுரேஷ் சலேயின் பிரச்சினையாகவுள்ளது- அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்
Local
23 June 2026
அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு
Local
23 June 2026
டெல்லியில் கடும் தூசிப்புயல் : சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!
Local
23 June 2026
வரி செலுத்தவில்லையா? வங்கி கணக்குகள் முடக்கப்படும் அபாயம்!
Local
23 June 2026
குருணாகல், வெல்லவ பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிச்சூடு
Local
23 June 2026