International23 June 2026

டெல்லியில் கடும் தூசிப்புயல் : சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய (NCR) பகுதிகளில் கடுமையான தூசிப்புயல் வீசியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கை அறிவித்துள்ளனர்.

தூசிப்புயலின் தாக்கத்தால் பல பகுதிகளில் பார்வைத்திறன் குறைந்ததுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சில பகுதிகளில் இலேசான மழை பெய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், தென்மேற்கு பருவமழை படிப்படியாக வட இந்தியாவை நோக்கி முன்னேறி வருவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் பரவலான மழை நிலை உருவாகும் வரை கடுமையான தூசிப்புயல், பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை நிலைமைகள் தொடரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்கவும், வானிலை அறிவிப்புகளை அவதானமாகப் பின்பற்றவும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes