General24 June 2026

கொழும்புக்கு வருகிறது மின்சார பேருந்து புரட்சி - முக்கிய கட்டம் நிறைவு!

கொழும்பு நகரின் பேருந்து போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட 'பசுமை நகரங்கள், உட்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி' (GCIEP) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் UNDP இலங்கை பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, கொழும்பில் மின்சாரப் பேருந்துகளின் பயன்பாட்டை விரைவுபடுத்துவதற்கான வரைபடம், பிரதி உயர்ஸ்தானிகர் தெரசா ஓமஹோனியால் (Theresa O’Mahony) கையளிக்கப்பட்டது.

அத்துடன், இலங்கையின் மின்சார போக்குவரத்து இலக்குகளை அடைவதற்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் ஆதரவு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

இலங்கையின் தேசியக் கொள்கைகளுக்கு அமைவாக, நிலையான மற்றும் திறமையான எதிர்கால நகர்ப்புற போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
Related recommendation
Hiru TV News | Programmes