General24 June 2026

தமிழ் நாட்டில் யூடியூபர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: உணவு பாதுகாப்புத்துறை விடுத்துள்ள அறிவுறுத்தல்

உணவகங்கள் குறித்த விமர்சனங்களை (Food Review) மேற்கொள்ளும் யூடியூபர்கள் மற்றும் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களுக்கு, தமிழக உணவு பாதுகாப்புத்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, இனிவரும் காலங்களில், உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெற்ற உணவகங்களில் மட்டுமே உணவு விமர்சனங்களை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன், உணவகங்களுக்குச் செல்லும்போது, அந்த உணவகம் உரிய உரிமம் பெற்றுள்ளதா என்பதையும், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும். குறிப்பாக, பணியாளர்கள் கையுறை மற்றும் தலைக்கவசம் அணிந்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.

மேலும், உணவகங்களில் வழங்கப்படும் குடிநீர் மற்றும் உணவு ஆகியவை தரமான முறையில் உள்ளனவா என்பதை ஆய்வு செய்த பின்னரே விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் செய்யப்படும் உணவு விமர்சனங்கள் பொதுமக்களின் ஆரோக்கியத்தோடு தொடர்புடையவை என்பதால், இத்தகைய பொறுப்புணர்வுடன் கூடிய விமர்சனங்களை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes