General27 June 2026

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபா மோசடி: பெண் ஒருவர் கைது

வெளிநாட்டில் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், ஹொரண விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபர் அளுபோம்முல்ல காவல்துறைப் பிரிவில் வைத்து, நேற்றையதினம் ஹொரண விசேட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வெளிநாட்டில் தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி, ரூபா 20 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

41 வயதுடைய பாணதுறையை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் குறித்த மேலதிக விசாரணைகளை ஹொரண விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes