நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சூழலைச் சுத்தப்படுத்துவதற்கும் நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றுவதற்கும் புதிய சுற்றறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
கிராம மட்டத்திலான சமூக வலுவூட்டல் குழுக்களின் ஊடாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதில் கிராம உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்பார்கள்.
ஜனாதிபதி செயலாளர் அல்லது சுகாதார அமைச்சின் செயலாளரினால் இன்னும் சில தினங்களில் இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.
தற்போதைய உயர் டெங்கு அபாய காலத்தைக் கருத்திற்கொண்டு, தினசரி டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு இந்தச் சுற்றறிக்கை வழிநடத்தும்.
அபாய நிலை குறையும் போது, இவை வாராந்த நடவடிக்கைகளாகக் குறைக்கப்படும்.
இந்த வருடத்தில் இதுவரை 51,049 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 31 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை மேல், தென், சபரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 124 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு பரவலுக்கு உயர் அபாயமுள்ள பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தமது சூழலைத் தொடர்ச்சியாகச் சுத்தமாக வைத்திருக்குமாறும், நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றுமாறும் சுகாதாரத் துறையினர் தொடர்ந்தும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
கிராம மட்டத்திலான சமூக வலுவூட்டல் குழுக்களின் ஊடாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதில் கிராம உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்பார்கள்.
ஜனாதிபதி செயலாளர் அல்லது சுகாதார அமைச்சின் செயலாளரினால் இன்னும் சில தினங்களில் இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.
தற்போதைய உயர் டெங்கு அபாய காலத்தைக் கருத்திற்கொண்டு, தினசரி டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு இந்தச் சுற்றறிக்கை வழிநடத்தும்.
அபாய நிலை குறையும் போது, இவை வாராந்த நடவடிக்கைகளாகக் குறைக்கப்படும்.
இந்த வருடத்தில் இதுவரை 51,049 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 31 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை மேல், தென், சபரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 124 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு பரவலுக்கு உயர் அபாயமுள்ள பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தமது சூழலைத் தொடர்ச்சியாகச் சுத்தமாக வைத்திருக்குமாறும், நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றுமாறும் சுகாதாரத் துறையினர் தொடர்ந்தும் அறிவுறுத்தி வருகின்றனர்.
Latest News
கொழும்பு பங்குச் சந்தையின் அதிரடி நடவடிக்கை : செயலற்ற கணக்குகளைப் பாதுகாக்கும் புதிய திட்டம் அறிமுகம்!
Local
28 June 2026
ஜனாதிபதி செயலகத்தில் தூய்மைப் பணி அவசியமெனில், நாட்டின் ஏனைய பகுதிகளின் நிலை என்ன? - நாமல் ராஜபக்ஷ கேள்வி
Local
28 June 2026
தேசிய அடையாள அட்டை இல்லாத முதியவர்களுக்கான விசேட அடையாள அட்டை வழங்கும் திட்டம் ஆரம்பம்
Local
28 June 2026
கல்முனையில் நாயைத் துன்புறுத்திய இளைஞர் கைது
Local
28 June 2026
ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் குழுவில் 144 வாக்குகளுடன் இலங்கை முதலிடம்.
Local
28 June 2026
ஜோர்தானை வீழ்த்தி ஆர்ஜென்டினா அபார வெற்றி
Local
28 June 2026
பொசன் பண்டிகையை முன்னிட்டு 18,129 தானசாலைகள் பதிவு
Local
28 June 2026
கால்பந்து கிண்ண தொடரில் புதிய சாதனை படைத்த மெஸ்ஸி
Local
28 June 2026
வரலாறு காணாத அளவில் உயரும் வெப்பநிலை : ஜேர்மனியில் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்!
Local
28 June 2026
வீதி பயன்பாட்டிற்கு தகுதியற்ற வாகனங்களை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பம்
Local
28 June 2026