General28 June 2026

வீதி பயன்பாட்டிற்கு தகுதியற்ற வாகனங்களை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பம்

வீதி பயன்பாட்டிற்கு தகுதியற்ற வாகனங்களைக் கண்டறியும் விசேட சோதனை நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

இந்தச் சோதனை நடவடிக்கைகள், மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை மலையகப் பகுதிகளில் இயக்கப்படும் வாகனங்கள் குறித்து இந்தச் சோதனை நடவடிக்கையின் போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

சோதனைக்கு உட்படுத்தப்படும் வாகனங்களில், வீதி பயன்பாட்டிற்கு தகுதியற்றவை என அடையாளங்காணப்படும் வாகனங்களை சேவையிலிருந்து நீக்கவும், அவை பொது வீதிகளில் இயக்கப்படுவதைத் தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes