General29 June 2026

பிராந்திய பாதுகாப்பு: வளைகுடா நாடுகளுடன் கைகோர்க்கத் தயார் - ஈரான் அதிரடி

பிராந்திய பாதுகாப்பு விவகாரத்தில் வளைகுடா நாடுகளுடன் இணைந்து செயல்பட ஈரான் தயாராக இருப்பதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் அராக்சி தெரிவித்துள்ளார்.

ஈராக் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் காசிம் அல்-அபூடியுடனான சந்திப்பின் போது பேசிய அமைச்சர் அராக்சி, கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த சம்பவங்களிலிருந்து வளைகுடா நாடுகள் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பிராந்தியத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை அந்த நாடுகளே ஒன்றிணைந்து முடிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஏதேனும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுமாயின், அது பொருளாதார விவகாரங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

பிராந்திய பாதுகாப்பிற்கான இத்தகைய கட்டமைப்பில், பிராந்தியத்திற்கு வெளியிலுள்ள வெளிநாட்டு இராணுவ சக்திகளுக்கு இடமளிக்கப்படக் கூடாது என்பதில் ஈரான் உறுதியாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
Related recommendation
Hiru TV News | Programmes