General29 June 2026

துப்பாக்கியை தவறவிட்ட காவல்துறை அதிகாரிக்கு விளக்கமறியல்!

யட்டியந்தோட்டை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி, தனது கடமைநேர துப்பாக்கியை தவறவிட்டமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி கடமைக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்களை மீண்டும் ஒப்படைக்கத் தவறியமைக்காக, சீதாவாக்கபுர வலய குற்ற விசாரணைப் பிரிவினரால் கடந்த 27 ஆம் திகதி குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதாவாக்கபுர வலய குற்ற விசாரணைப்பிரிவும், சீதாவாக்க சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் விசேட நடவடிக்கைப் பிரிவும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes