General30 June 2026

ஹப்புத்தளையில் குளவி தாக்குதல் – தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஹப்புத்தளை கல்கந்த தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் ஐந்து பேர் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் இரண்டு பெண்களும், மூன்று ஆண்களும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் உடனடியாக ஹப்புத்தளை பங்கட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

சிகிச்சைக்குப் பின்னர், பாதிக்கப்பட்டவர்களில் இருவர் வீடு திரும்பியுள்ளதுடன், ஏனையோர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
குடிநீர் விநியோக மையம் என்ற  பெயரில் சட்டவிரோத  மதுபானத்தயாரிப்பு: மாலபேயில் 2 கோடி ரூபாய் சட்டவிரோத மதுபான ஆலை முற்றுகை!    கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆடம்பர வீடுகளைக் குறுகிய கால வாடகையடிப்படையில் பெற்று, எவ்விதத் தரக்கட்டுப்பாடும் இன்றி, சட்டவிரோதமாகப் பெருமளவில் மதுபானம் தயாரித்து நாடு முழுவதும் விநியோகம் செய்து வந்த பாரிய கடத்தல் கும்பல் ஒன்றை 'Hiru CIA' குழுவினர் அம்பலப்படுத்தியுள்ளனர்.  ஆரம்பத்தில் குடிநீர் விநியோக மையம் என்ற போர்வையில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இயங்கி வந்த இந்த ரகசிய மதுபான உற்பத்தி நிலையத்தை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவின் அதிகாரிகள் அதிரடியாக முற்றுகையிட்டனர்.   மிகுந்த சிரமத்திற்கு மத்தியில், இந்த அதிரடி முற்றுகையின் போது முதன்மைச் சந்தேக நபர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் காவல்துறையினரால் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர்.  இதனைத் தொடர்ந்து, அந்த இருமாடி வீட்டிற்குள் நுழைந்து அதிகாரிகள் சோதனையிட்ட போது, அங்கு அதிநவீன மதுபானம் தயாரிக்கும் இயந்திரங்கள், போத்தல்களுக்கு மூடி போடும் கருவிகள் மற்றும் போத்தல்களில் ஒட்டுவதற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த அச்சிடப்பட்ட பெருமளவிலான போலி லேபிள்களும் (Labels) கண்டெடுக்கப்பட்டன.  மேல் மாகாண வடக்கு திசை குற்றப்பிரிவின் பணிப்பாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் சமிந்த தர்மரத்னவின் நேரடி அறிவுறுத்தலின் பேரில், காவல்துறை பரிசோதகர் பத்தும் அஞ்சன உள்ளிட்ட இரண்டு சிறப்பு அலகுகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் இந்த வெற்றிகரமான முற்றுகையை மேற்கொண்டனர்.  இந்த ரகசிய ஆலைக்குள் இருந்து சந்தைக்கு விநியோகிக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்த, 2 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள சட்டவிரோத மதுபானப் போத்தல்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.  கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், தாங்கள் எவ்வாறு எவ்விதத் தரக்கட்டுப்பாடும் இன்றி மதுபானத்தை நிரப்பி, அதற்கு இயந்திரங்கள் மூலம் மூடி போடுகிறோம் என்பதை காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையிலேயே செய்து காண்பித்துள்ளனர்.   சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையை அடுத்து, இந்தச் சட்டவிரோத வியாபாரத்திற்குப் புகலிடம் கொடுத்த வீட்டின் உரிமையாளரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்ட அனைத்துச் சந்தேக நபர்களையும் கடுவெல நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, இந்த வலையமைப்பின் பின்னணியில் உள்ள ஏனைய நபர்களைக் கண்டறிய மேலதிக விசாரணைக்காகத் தடுப்புக் காவல் உத்தரவைப் பெறவுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குடிநீர் விநியோக மையம் என்ற பெயரில் சட்டவிரோத மதுபானத்தயாரிப்பு: மாலபேயில் 2 கோடி ரூபாய் சட்டவிரோத மதுபான ஆலை முற்றுகை! கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆடம்பர வீடுகளைக் குறுகிய கால வாடகையடிப்படையில் பெற்று, எவ்விதத் தரக்கட்டுப்பாடும் இன்றி, சட்டவிரோதமாகப் பெருமளவில் மதுபானம் தயாரித்து நாடு முழுவதும் விநியோகம் செய்து வந்த பாரிய கடத்தல் கும்பல் ஒன்றை 'Hiru CIA' குழுவினர் அம்பலப்படுத்தியுள்ளனர். ஆரம்பத்தில் குடிநீர் விநியோக மையம் என்ற போர்வையில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இயங்கி வந்த இந்த ரகசிய மதுபான உற்பத்தி நிலையத்தை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவின் அதிகாரிகள் அதிரடியாக முற்றுகையிட்டனர். மிகுந்த சிரமத்திற்கு மத்தியில், இந்த அதிரடி முற்றுகையின் போது முதன்மைச் சந்தேக நபர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் காவல்துறையினரால் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அந்த இருமாடி வீட்டிற்குள் நுழைந்து அதிகாரிகள் சோதனையிட்ட போது, அங்கு அதிநவீன மதுபானம் தயாரிக்கும் இயந்திரங்கள், போத்தல்களுக்கு மூடி போடும் கருவிகள் மற்றும் போத்தல்களில் ஒட்டுவதற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த அச்சிடப்பட்ட பெருமளவிலான போலி லேபிள்களும் (Labels) கண்டெடுக்கப்பட்டன. மேல் மாகாண வடக்கு திசை குற்றப்பிரிவின் பணிப்பாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் சமிந்த தர்மரத்னவின் நேரடி அறிவுறுத்தலின் பேரில், காவல்துறை பரிசோதகர் பத்தும் அஞ்சன உள்ளிட்ட இரண்டு சிறப்பு அலகுகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் இந்த வெற்றிகரமான முற்றுகையை மேற்கொண்டனர். இந்த ரகசிய ஆலைக்குள் இருந்து சந்தைக்கு விநியோகிக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்த, 2 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள சட்டவிரோத மதுபானப் போத்தல்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், தாங்கள் எவ்வாறு எவ்விதத் தரக்கட்டுப்பாடும் இன்றி மதுபானத்தை நிரப்பி, அதற்கு இயந்திரங்கள் மூலம் மூடி போடுகிறோம் என்பதை காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையிலேயே செய்து காண்பித்துள்ளனர். சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையை அடுத்து, இந்தச் சட்டவிரோத வியாபாரத்திற்குப் புகலிடம் கொடுத்த வீட்டின் உரிமையாளரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அனைத்துச் சந்தேக நபர்களையும் கடுவெல நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, இந்த வலையமைப்பின் பின்னணியில் உள்ள ஏனைய நபர்களைக் கண்டறிய மேலதிக விசாரணைக்காகத் தடுப்புக் காவல் உத்தரவைப் பெறவுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆடம்பர வீடுகளைக்...
Read more
Hiru TV News | Programmes