கந்தளாய், சூரியபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திபுர பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான விவசாயி ஒருவர் இன்று (03) அதிகாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஜெயந்திபுர பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.
இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில், ஜெயந்திபுர பகுதியில் அமைந்துள்ள ஜனசவி குளம் அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர், தனது விவசாயக் காணியை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அந்த பகுதிக்குச் சென்றிருந்தபோது, அங்கு வந்த காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக சூரியபுர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கந்தளாய் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் அண்மைக் காலமாக காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் , மனித–யானை மோதல்களைத் தடுக்க நிரந்தர தீர்வுகளை விரைவாக நடைமுறைப்படுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Latest News
சீனி அடங்கிய திரவ உணவுகளின் பொதிகளில் வர்ணக் குறியீடுகளை காட்சிப்படுத்துவதில் புதிய நடைமுறைகள்
Local
03 July 2026
4×100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் புதிய சாதனை படைத்த கொழும்பு மகளிர் கல்லூரி
Local
03 July 2026
14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 100x4 மீற்றர் அஞ்சலோட்ட போட்டியில் பம்பலப்பிட்டி புனித பீட்டர் கல்லூரி வெற்றி
Local
03 July 2026
பிரான்ஸில் வெப்ப அலையினால் 2,025 பேர் உயிரிழப்பு
Local
03 July 2026
தங்கவிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Local
03 July 2026
ரகித, சரித் அபேசிங்க மற்றும் அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
Local
03 July 2026
கந்தளாயில் காட்டு யானை தாக்குதல் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு
Local
03 July 2026
ஹெட்போன் அணிந்து வீதியில் நடப்போருக்கு எதிராக இனி நீதிமன்ற நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!
Local
03 July 2026
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட நீதிமன்றில் முன்னிலை
Local
03 July 2026
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
Local
03 July 2026