General06 July 2026

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தொடரும் பதற்றம் : மேலதிகமாக 10 காவல்துறை குழுக்கள் களமிறக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் பதற்றமான சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மேலதிகமாக 10 காவல்துறை குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறைச்சாலையின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நிலைமையை முழுமையாகக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes