International07 July 2026

உச்சநீதிமன்றத்தில் அதிரடி திருப்பம் : கரூர் நெரிசல் வழக்கு மனுவைத் திரும்பப் பெற்றது திமுக!

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவைத் திமுக திரும்பப் பெற்றுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள், இது குறித்துப் பொதுவெளியில் பேசுவதற்குத் தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எனினும், அந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதற்கு உச்சநீதிமன்றம் மறுப்புத் தெரிவித்தது.

நீதிமன்றத்தின் இந்த மறுப்பைத் தொடர்ந்து, தாக்கல் செய்திருந்த மனுவைத் திரும்பப் பெறுவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes