தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இலங்கை தமிழர் ஒருவர், தனது அடையாளத்தை மறைத்து சட்ட விரோதமாக இந்திய அரச ஆவணங்களைப் பெற்றுப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சின்னசேலம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த தங்கவேல் புகழேந்திரன் (39) என்ற இவர், கடந்த 2017ஆம் ஆண்டு அந்த பகுதியைச் சேர்ந்த சாமிராபானு என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்குப் பிறகு, புகழேந்திரன் தனது மதத்தை மாற்றிக்கொண்டு மொஹமட் சபீர் என்று பெயரையும் மாற்றிக்கொண்டார்.
இந்த நிலையில், தான் ஒரு இலங்கை தமிழர் என்பதை மறைத்து, இந்திய அரசின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை (ரேஷன் கார்ட்) மற்றும் வருமான வரி அடையாள அட்டை (PAN கார்ட்) ஆகியவற்றை சட்டவிரோதமாகப் பெற்று கடந்த 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்துள்ளார்.
அத்துடன், ஏதிலிகள் முகாமில் புகழேந்திரன் என்ற பெயரிலும், வெளியில் மொஹமட் சபீர் என்ற பெயரிலும் அவர் அரச நலத்திட்ட உதவிகளைப் பெற்று வந்தமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்த உளவுத்துறையின் ரகசியத் தகவலையடுத்து, கள்ளக்குறிச்சி காவல்துறையினர் புகழேந்திரன் என்கின்ற மொஹமட் சபீரை கைது செய்தனர்.
இந்த மோசடி விவகாரத்தில், தொடர்புடைய நபர் போலி ஆவணங்களை எப்படிப் பெற்றார் என்பது குறித்தும், ஏதிலிகள் முகாமில் வசிக்கும் மற்றவர்கள் இதுபோன்று இந்திய அரச ஆவணங்களைப் பெற்றுள்ளனரா என்பது குறித்தும் காவல்துறை மற்றும் உளவுத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சின்னசேலம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த தங்கவேல் புகழேந்திரன் (39) என்ற இவர், கடந்த 2017ஆம் ஆண்டு அந்த பகுதியைச் சேர்ந்த சாமிராபானு என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்குப் பிறகு, புகழேந்திரன் தனது மதத்தை மாற்றிக்கொண்டு மொஹமட் சபீர் என்று பெயரையும் மாற்றிக்கொண்டார்.
இந்த நிலையில், தான் ஒரு இலங்கை தமிழர் என்பதை மறைத்து, இந்திய அரசின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை (ரேஷன் கார்ட்) மற்றும் வருமான வரி அடையாள அட்டை (PAN கார்ட்) ஆகியவற்றை சட்டவிரோதமாகப் பெற்று கடந்த 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்துள்ளார்.
அத்துடன், ஏதிலிகள் முகாமில் புகழேந்திரன் என்ற பெயரிலும், வெளியில் மொஹமட் சபீர் என்ற பெயரிலும் அவர் அரச நலத்திட்ட உதவிகளைப் பெற்று வந்தமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்த உளவுத்துறையின் ரகசியத் தகவலையடுத்து, கள்ளக்குறிச்சி காவல்துறையினர் புகழேந்திரன் என்கின்ற மொஹமட் சபீரை கைது செய்தனர்.
இந்த மோசடி விவகாரத்தில், தொடர்புடைய நபர் போலி ஆவணங்களை எப்படிப் பெற்றார் என்பது குறித்தும், ஏதிலிகள் முகாமில் வசிக்கும் மற்றவர்கள் இதுபோன்று இந்திய அரச ஆவணங்களைப் பெற்றுள்ளனரா என்பது குறித்தும் காவல்துறை மற்றும் உளவுத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Latest News
மெதுவான ஓவர் வீதம்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அபராதம் - புள்ளிகள் குறைப்பு
Local
09 July 2026
தீவிரவாத ஆதரவு பட்டியலிலிருந்து சிரியாவை நீக்க அமெரிக்கா தீர்மானம்!
Local
09 July 2026
புலம்பெயர் இலங்கையர்களுக்கு வாக்குரிமை மற்றும் ஓய்வூதியம்: அரசாங்கம் தீவிரம்!
Local
09 July 2026
இரு பெயர்கள், சட்டவிரோதமாக அரச சலுகைகள்: இலங்கைத் தமிழர் கைது!
Local
09 July 2026
சிறுபோக நெல் கொள்முதல் ஜூலை 15 முதல் ஆரம்பம்: ரூ. 16 பில்லியன் ஒதுக்கீடு
Local
08 July 2026
விண்வெளியில் மனிதனில் மூளையில் ஏற்படும் மாற்றங்கள்!
Local
08 July 2026
ஈரான் மீது இன்றிரவு கடுமையான தாக்குதல்: போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
Local
08 July 2026
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்: சந்திரிகாவிடம் விசாரணை நடத்துமாறு ரவிகரன் வலியுறுத்தல்
Local
08 July 2026
நீர்கொழும்பு சிறைக்கலவரம்: கடந்தகால சம்பவங்களிலிருந்து வேறுபடுகிறது – ரவிகரன்
Local
08 July 2026
பேஸ்புக் இல் AI மூலம் மோசடி: இலங்கை பயனர்களுக்கு எச்சரிக்கை
Local
08 July 2026