International21 July 2026

பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்ட ஈரானிய உள்துறை அமைச்சர்.

ஈரானிய உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மொமேனி பாகிஸ்தான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இஸ்லாமாபாத் சென்றுள்ளார்.

இந்த பயணத்தின் போது, அவர் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப் மற்றும் நாட்டின் இராணுவத் தலைமை அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ச்சியான பதற்றங்களுக்கு மத்தியில், இந்த சந்திப்பு ஒரு குறிப்பிடத்தக்க நேரடி ராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

எனினும், ஹோர்முஸ் நீரிணைப் பகுதியிலும் அதைச் சுற்றியும் அதிகரித்து வரும் தீவிர மோதல்களை விட இந்த தூதரக முயற்சிகள் தடுக்குமா என்பதில் கேள்வி எழுந்துள்ளது.

அத்துடன், பிராந்தியத்தில் விரைவாக அதிகரிக்கும் பதற்றங்களால், மோதலைத் தணித்து அமைதியைக் கொண்டுவர முயலும் மத்தியஸ்தர்கள் தற்போது கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருவதாக ஊடகங்கள் கூறுகின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes