இணையவழி அச்சுறுத்தல்கள், இணைய வன்முறைகள் மற்றும் டிஜிட்டல் தாக்கங்களில் இருந்து சிறுவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளதாகத் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இது குறித்த விரிவான தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கல்விச் செயற்பாட்டுப் பிரிவின் பல்துறை சார்ந்த பணிக்குழுவின் பங்களிப்புடன் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல நாடுகள் சமூக வலைதளப் பயன்பாட்டிற்கான வயது எல்லைகள் குறித்து விவாதித்து வரும் நிலையில், வெறும் தடைகள் மட்டுமே தீர்வாகாது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒரு நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட தடையின் போதும், 85 சதவீதமான குழந்தைகள் வேறு வழிகளில் தளங்களைப் தொடர்ந்து பயன்படுத்துவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதனால் கற்றல் வாய்ப்புகள் இழப்பு மற்றும் பாதுகாப்பற்ற தளங்களை நாடும் அபாயம் ஏற்படுவதாகவும் விவாதிக்கப்பட்டது.
இணைய வழியிலான சுரண்டல்கள், ஆபத்தான உள்ளடக்க வெளிப்பாடுகள், தூக்கமின்மை, இணைய அடிமைத்தனம் மற்றும் மனநல பாதிப்புகள் போன்றவற்றுக்குத் தீர்வு காணப் பல்துறை சார்ந்த உத்திகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.
டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துதல், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல், இணைய தளங்களை நெறிப்படுத்துதல், அடிமையாக்கும் அம்சங்களை முடக்குதல் மற்றும் பாதுகாப்பு வடிவமைப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்தச் செயற்பாட்டின் ஒரு கட்டமாக, சர்வதேசக் கட்டமைப்புகள் மற்றும் தேசிய வளங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நல்வாழ்வு தொடர்பான வரைவு பாடசாலை மட்டத்திலான வழிகாட்டல்கள் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டன.
சம்பந்தப்பட்ட உரிய நிறுவனங்களின் ஒப்புதலுக்குப் பிறகு, இந்த இறுதி வழிகாட்டல்கள் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு வழங்கப்படும் எனவும், அவற்றைச் செயற்படுத்துவதற்கான முறையான பயிற்சி மற்றும் நோக்குநிலைகள் அளிக்கப்படும் எனவும் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இது குறித்த விரிவான தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கல்விச் செயற்பாட்டுப் பிரிவின் பல்துறை சார்ந்த பணிக்குழுவின் பங்களிப்புடன் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல நாடுகள் சமூக வலைதளப் பயன்பாட்டிற்கான வயது எல்லைகள் குறித்து விவாதித்து வரும் நிலையில், வெறும் தடைகள் மட்டுமே தீர்வாகாது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒரு நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட தடையின் போதும், 85 சதவீதமான குழந்தைகள் வேறு வழிகளில் தளங்களைப் தொடர்ந்து பயன்படுத்துவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதனால் கற்றல் வாய்ப்புகள் இழப்பு மற்றும் பாதுகாப்பற்ற தளங்களை நாடும் அபாயம் ஏற்படுவதாகவும் விவாதிக்கப்பட்டது.
இணைய வழியிலான சுரண்டல்கள், ஆபத்தான உள்ளடக்க வெளிப்பாடுகள், தூக்கமின்மை, இணைய அடிமைத்தனம் மற்றும் மனநல பாதிப்புகள் போன்றவற்றுக்குத் தீர்வு காணப் பல்துறை சார்ந்த உத்திகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.
டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துதல், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல், இணைய தளங்களை நெறிப்படுத்துதல், அடிமையாக்கும் அம்சங்களை முடக்குதல் மற்றும் பாதுகாப்பு வடிவமைப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்தச் செயற்பாட்டின் ஒரு கட்டமாக, சர்வதேசக் கட்டமைப்புகள் மற்றும் தேசிய வளங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நல்வாழ்வு தொடர்பான வரைவு பாடசாலை மட்டத்திலான வழிகாட்டல்கள் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டன.
சம்பந்தப்பட்ட உரிய நிறுவனங்களின் ஒப்புதலுக்குப் பிறகு, இந்த இறுதி வழிகாட்டல்கள் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு வழங்கப்படும் எனவும், அவற்றைச் செயற்படுத்துவதற்கான முறையான பயிற்சி மற்றும் நோக்குநிலைகள் அளிக்கப்படும் எனவும் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
Latest News
சுங்க வரி நடவடிக்கையால் சர்வதேச வர்த்தகத்தில் பதற்றம்; அமெரிக்காவுக்கு எதிராக உலக நாடுகள்
Local
24 July 2026
சமூக வலைதளங்களில் இருந்து விலகும் முன்னணி நடிகைகள்: காரணம் என்ன?
Local
24 July 2026
ஜூலை 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
Local
24 July 2026
திரையரங்குகளை அதிரவைக்கும் 'ஜனநாயகன்' - சமூக வலைதளங்களில் பிரபல்யமான ஹேஷ்டேக்!
Local
24 July 2026
வசூல் வேட்டையில் 'ஜனநாயகன்': முதல் நாளில் சாதனை வசூல்!
Local
24 July 2026
வத்தளை துப்பாக்கிச் சூடு: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!
Local
24 July 2026
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு பிடியாணை!
Local
24 July 2026
மத்திய கிழக்கு பதற்றத்தால் 100 அமெரிக்க டொலரை தாண்டிய மசகு எண்ணெய் விலை
Local
24 July 2026
ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று விவாதம்!
Local
24 July 2026
நீட் விவகாரம்: அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் - பிரதமர் மோடி தெரிவிப்பு
Local
24 July 2026