நுகர்வோரிடம் இருந்து வைப்புகளைப் பெற்றுக்கொண்டு இலாபம் வழங்கும் எந்தவொரு பெருந்தோட்ட நிறுவனத்தையும் அங்கீகரிப்பதற்கோ அல்லது அனுமதிப்பதற்கோ இலங்கை மத்திய வங்கியிடம் எத்தகைய பொறிமுறையும் கிடையாது என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாணயக் கொள்கை மீளாய்வு அறிக்கை வெளியீட்டின்போது 'ஹிரு நியூஸ்' எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே ஆளுநர் இதனைக் குறிப்பிட்டார்.
இவ்வாறான முறையில் வைப்புகளைச் சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய வங்கியின் அனுமதி வழங்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வைப்புகளை இவ்வாறான முறையில் ஏற்கும் செயற்பாடுகள் சட்டவிரோதமானவை என்பதால், இத்தகைய செயற்பாடுகளில் பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்குமாறு மத்திய வங்கி ஆளுநர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே இவ்வாறான திட்டங்களில் எவரேனும் பணம் முதலீடு செய்திருந்தால், உடனடியாக அந்தப் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும், அவ்வாறு மீளப் பெற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில் காவல்துறையிலோ அல்லது மத்திய வங்கியிலோ முறைப்பாடு செய்யுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த நிறுவனங்கள் சட்டபூர்வமாக இயங்குவதற்கு விரும்பினால் நிதி நிறுவனமாகப் பதிவு செய்வதே ஒரே வழியாகும் என்றும், அவ்வாறு செய்யாமல் வைப்புகளை ஏற்பது இலங்கையில் முழுமையாகச் சட்டவிரோதமானது என்றும் மத்திய வங்கி ஆளுநர் மேலும் வலியுறுத்தினார்.
நாணயக் கொள்கை மீளாய்வு அறிக்கை வெளியீட்டின்போது 'ஹிரு நியூஸ்' எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே ஆளுநர் இதனைக் குறிப்பிட்டார்.
இவ்வாறான முறையில் வைப்புகளைச் சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய வங்கியின் அனுமதி வழங்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வைப்புகளை இவ்வாறான முறையில் ஏற்கும் செயற்பாடுகள் சட்டவிரோதமானவை என்பதால், இத்தகைய செயற்பாடுகளில் பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்குமாறு மத்திய வங்கி ஆளுநர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே இவ்வாறான திட்டங்களில் எவரேனும் பணம் முதலீடு செய்திருந்தால், உடனடியாக அந்தப் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும், அவ்வாறு மீளப் பெற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில் காவல்துறையிலோ அல்லது மத்திய வங்கியிலோ முறைப்பாடு செய்யுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த நிறுவனங்கள் சட்டபூர்வமாக இயங்குவதற்கு விரும்பினால் நிதி நிறுவனமாகப் பதிவு செய்வதே ஒரே வழியாகும் என்றும், அவ்வாறு செய்யாமல் வைப்புகளை ஏற்பது இலங்கையில் முழுமையாகச் சட்டவிரோதமானது என்றும் மத்திய வங்கி ஆளுநர் மேலும் வலியுறுத்தினார்.
Latest News
செங்கடலில் அதிகரிக்கும் பதற்றம் : சவூதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
Local
23 July 2026
இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் : 30 இலட்சம் ரூபாய் அபராதம் - யாழில் சம்பவம்
Local
23 July 2026
'ஜனநாயகன்' திரைப்படம் வெளியீடு: உலகம் முழுவதும் ரசிகர்கள் கோலாகலக் கொண்டாட்டம்!
Local
23 July 2026
பிற்பகல் 2 மணிக்கு பின் வானிலையில் மாற்றம் : வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்!
Local
23 July 2026
எதிர்க்கட்சி முற்றிலும் அகற்றப்படும் என கூறுவது ஜனநாயக விரோத கூற்று - நாமல் ராஜபக்ச எச்சரிக்கை.
Local
23 July 2026
அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைச்சாலைகளில் இல்லை - நீதியமைச்சர் விளக்கம்!
Local
23 July 2026
இலங்கையின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்கத் திட்டம் : 2029 க்குள் 500 மெட்ரோ பேருந்துகள்
Local
23 July 2026
காவல்துறை அதிகாரிகள் போன்று ஆள்மாறாட்டம் செய்து சமூக வலைத்தளங்கள் ஊடாக நடத்தும் நிதி மோசடிகள் குறித்து எச்சரிக்கை!
Local
23 July 2026
வளைகுடா நாடுகளில் உள்ள CIA தளங்கள் மீது ஈரான் தாக்குதல்: ரஷ்யாவின் பங்கு குறித்து அமெரிக்க உளவுத்துறை விசாரணை! - ரொய்ட்டர்ஸ்
Local
23 July 2026
எந்த தவறும் செய்யாமலேயே காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டேன் - பொலிவுட் நடிகை குற்றச்சாட்டு!
Local
23 July 2026