Entertainment23 July 2026

எந்த தவறும் செய்யாமலேயே காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டேன் - பொலிவுட் நடிகை குற்றச்சாட்டு!

மாணவர்களின் கல்விச் சீர்திருத்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவாக புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் போது தாம் மும்பை காவல்துறையினரால் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டதாக பொலிவுட் நடிகையான ஆயிஷா கான் குற்றம்சாட்டியுள்ளார்.

மாணவர்களின் போராட்டப் பகுதிக்கு அருகில் அமைதியான முறையில் நின்றுகொண்டிருந்த வேளையில், தனது சகோதரரும் நண்பர்களும் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து தான் அங்கு காத்திருந்ததாகவும், எவ்வித சட்டத்தையும் மீறாத போதிலும் காவல்துறையினர் தன்னை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளிகள் மூலம் தெரிவித்துள்ளார்.

காவல்துறை வாகனத்திற்குள்ளும், பின்னர் வொர்லி காவல் நிலையத்திலிருந்தும் அவர் வெளியிட்ட இந்தக் காணொளிகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டுள்ளன.

கல்விச் சீர்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

எனினும், நடிகை ஆயிஷா கானின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மும்பை காவல்துறை தரப்பிலிருந்து உடனடியாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.
Related recommendation
Hiru TV News | Programmes