International24 July 2026

'குஷா' ஏவுகணைச் சோதனை வெற்றி: இந்தியாவின் வான் பாதுகாப்பு திறனுக்குக் கிடைத்த பெரும் பலம்!

இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'குஷா' (KUSHA) என்ற நீண்ட தூர வான் பாதுகாப்பு ஏவுகணையின் (Long-Range Surface-to-Air Missile) முதல் கட்டச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா கடற்கரைக்கு அருகில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவிலிருந்து இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .

ரஷ்யாவின் 'S-400' மற்றும் அமெரிக்காவின் 'Patriot' ஆகிய சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இணையாக, இந்தியா தனது சொந்த 'புராஜெக்ட் குஷா' (Project Kusha) திட்டத்தின் கீழ் இந்த அமைப்பை உருவாக்கி வருகிறது.

இந்த ஏவுகணை அமைப்பு M 1, M 2 மற்றும் M 3 ஆகிய மூன்று வகையான இடைமறிப்பு ஏவுகணைகளைக் (Interceptor Missiles) கொண்டுள்ளது.

இவை முறையே 150 கி.மீ, 250 கி.மீ மற்றும் 350 முதல் 400 கி.மீ வரையிலான எல்லைகளில் உள்ள எதிரி இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவையாகும் .

எதிரிகளின் போர் வானுர்திகள், ஆளில்லா வானூர்திகள் UAVs), ஏவுகணைகள் மற்றும் எதிரிநாடுகளின் பெரிய ரக வானுர்திகளை *400 கி.மீ தொலைவிலேயே துல்லியமாகக் கண்டறிந்து அழிக்கும் ஆற்றலை இது பெற்றுள்ளது.

இத்தகைய நீண்ட தூர வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் திறன் உலகின் சில குறிப்பிட்ட நாடுகளிடம் மட்டுமே உள்ளது என்பதால், இந்தச் சோதனை இந்திய பாதுகாப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes