நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அந்தச் சங்கத்தின் பொருளாளர் எம்.ஏ.சி. பிரசாத், எலியின் சிறுநீரில் காணப்படும் பக்றீரியாவினால் இந்த நோய் பரவுவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பரவலாகக் காணப்படும் தொற்றும் நோய்களில் ஒன்றான இதனால், அதிக உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக விவசாயிகள், சேறு நிறைந்த சூழலில் பணிபுரிவோர், வடிகான் சுத்திகரிப்பாளர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கைவிடப்பட்ட வயல்வெளிகள் அல்லது சதுப்பு நிலங்களில் விளையாடும் சிறுவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தேங்கி நிற்கும் நீர், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் குளிப்பவர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், சேறு நிறைந்த சூழலில் பணியாற்றுபவர்கள் மருத்துவ ஆலோசனையின் பெயரில் உரிய தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
காய்ச்சல், தலைவலி, உடல் வலி மற்றும் கண் வலி போன்றவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த அறிகுறிகள் தென்பட்டால் சுயமாக வைத்தியம் செய்வதையோ அல்லது சிகிச்சையைப் தாமதப்படுத்துவதையோ தவிர்த்து, உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அந்தச் சங்கத்தின் பொருளாளர் எம்.ஏ.சி. பிரசாத், எலியின் சிறுநீரில் காணப்படும் பக்றீரியாவினால் இந்த நோய் பரவுவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பரவலாகக் காணப்படும் தொற்றும் நோய்களில் ஒன்றான இதனால், அதிக உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக விவசாயிகள், சேறு நிறைந்த சூழலில் பணிபுரிவோர், வடிகான் சுத்திகரிப்பாளர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கைவிடப்பட்ட வயல்வெளிகள் அல்லது சதுப்பு நிலங்களில் விளையாடும் சிறுவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தேங்கி நிற்கும் நீர், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் குளிப்பவர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், சேறு நிறைந்த சூழலில் பணியாற்றுபவர்கள் மருத்துவ ஆலோசனையின் பெயரில் உரிய தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
காய்ச்சல், தலைவலி, உடல் வலி மற்றும் கண் வலி போன்றவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த அறிகுறிகள் தென்பட்டால் சுயமாக வைத்தியம் செய்வதையோ அல்லது சிகிச்சையைப் தாமதப்படுத்துவதையோ தவிர்த்து, உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
Latest News
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் - 100 டொலரைக் கடந்தது மசகு எண்ணெய் விலை
Local
23 July 2026
நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் - பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை!
Local
23 July 2026
தெமட்டகொடையில் துப்பாக்கிச் சூடு !- ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி
Local
23 July 2026
அவுஸ்திரேலியாவிற்குப் பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து? - 2027 ஏஷஸ் தொடருக்கான அட்டவணை வெளியீடு!
Local
23 July 2026
'ஜன நாயகன்' படத்தின் இறுதிக்காட்சி - ரசிகர்களைக் கண்கலங்க வைத்த விஜய்யின் நெகிழ்ச்சி காணொளி!
Local
23 July 2026
கண்டியின் சில பகுதிகளில் 48 மணிநேர நீர்வெட்டு!
Local
23 July 2026
வாகன இறக்குமதிக்கான நாணயக் கடன் கடிதங்கள் திறப்பது வீழ்ச்சி - பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவிப்பு
Local
23 July 2026
'ஜன நாயகன்' படப்பிடிப்பு நிழற்படங்களுடன் பூஜா ஹெக்டே நெகிழ்ச்சிப் பதிவு!
Local
23 July 2026
'ஜனநாயகன்' படம் பார்க்க வந்த இடத்தில் கதறி அழுத தவெக நிர்வாகி : திரையரங்கில் நெகிழ்ச்சியான தருணம்!
Local
23 July 2026
காசோலை மோசடி வழக்கு : நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை!
Local
23 July 2026