பொலிவுட் நடிகை தேஜஸ்வினி கோலாபுரே, தனது தாய்மைப் பயணம் குறித்து வெளிப்படையாகப் பகிர்ந்துள்ள கருத்துகள் கவனத்தைப் பெற்றுள்ளன.
நடிகர் பங்கஜ் சரஸ்வத் என்பவரை 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட தேஜஸ்வினிக்கு, திருமணமாகி 8 ஆண்டுகளுக்குப் பின்னர் 2015ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.
அண்மையில் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், தனது குழந்தையைப் பெறுவதற்காக ஐந்து முறை செயற்கை கருத்தரித்தல் (IVF) சிகிச்சையை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
செயற்கை கருத்தரித்தல் (IVF) சிகிச்சை மிகவும் சவாலான ஒரு செயல்முறை. அதனை எதிர்கொள்ள மனதளவில் மிகுந்த வலிமை தேவை. பல ஊசிகள் மற்றும் மருத்துவ நடைமுறைகளைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாமதமாகக் குழந்தை பெற்றுக்கொள்ள எடுத்த முடிவு உடல் மற்றும் மனரீதியாகப் பல சவால்களை ஏற்படுத்தியதாகவும், பெண்கள் தங்களது குடும்பத் திட்டமிடல் குறித்து முன்கூட்டியே சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சிகிச்சையின்போது 1,000க்கும் மேற்பட்ட ஊசிகளை எடுத்துக்கொண்டதாகவும், ஐந்து முயற்சிகளில் இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் கூறிய தேஜஸ்வினி, ஐந்தாவது முயற்சியிலேயே தனக்குத் தாயாகும் வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தனது அனுபவத்தைப் பகிர்வதன் மூலம், கருத்தரிப்புச் சிகிச்சைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Latest News
லங்கா பிரீமியர் லீக் போட்டி நிர்ணயம்: விசாரணையில் சர்வதேச பேரவை
Local
25 July 2026
கிழக்கு ஐரோப்பாவில் பரபரப்பு: எல்லை மீறிய ரஷ்ய ஆளில்லா வானூர்தியை சுட்டு வீழ்த்தியது ருமேனியா!
Local
25 July 2026
அரசாங்கக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு சவால் விடுத்துள்ள சட்டத்தரணிகள் சங்கம்!
Local
25 July 2026
மஹாபொல நிதியத்தின் முக்கிய அறிவிப்பு
Local
25 July 2026
வடமேற்கு பாகிஸ்தானில் பயங்கரம்: படையினர்,தீவிரவாதிகள் 27பேர் உயிரிழப்பு
Local
25 July 2026
16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களில் பதிவிடத் தடை செய்ய முன்மொழிவு!
Local
25 July 2026
ஹூ_தி தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள யேமன் மீது சவூதி தலைமையிலான கூட்டணிப் படைகள் தாக்குதல்
Local
25 July 2026
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பதவிக்காலம் நீடிப்பு
Local
25 July 2026
பாலியல் குற்றச்சாட்டு: பிரதம வழக்குத் தொடுநரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நீக்கியது!
Local
25 July 2026
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் ரூ. 110 மில்லியன் மதிப்புள்ள கொக்கெய்னுடன் 79 வயது ஸ்பெயின் நாட்டுப் பயணி கைது!
Local
25 July 2026