International24 July 2026

5 முறை செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை - இறுதியில் தாயான நடிகை பகிர்ந்த வலி நிறைந்த அனுபவம்

பொலிவுட் நடிகை தேஜஸ்வினி கோலாபுரே, தனது தாய்மைப் பயணம் குறித்து வெளிப்படையாகப் பகிர்ந்துள்ள கருத்துகள் கவனத்தைப் பெற்றுள்ளன.

நடிகர் பங்கஜ் சரஸ்வத் என்பவரை 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட தேஜஸ்வினிக்கு, திருமணமாகி 8 ஆண்டுகளுக்குப் பின்னர் 2015ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.

அண்மையில் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், தனது குழந்தையைப் பெறுவதற்காக ஐந்து முறை செயற்கை கருத்தரித்தல் (IVF) சிகிச்சையை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

செயற்கை கருத்தரித்தல் (IVF) சிகிச்சை மிகவும் சவாலான ஒரு செயல்முறை. அதனை எதிர்கொள்ள மனதளவில் மிகுந்த வலிமை தேவை. பல ஊசிகள் மற்றும் மருத்துவ நடைமுறைகளைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாமதமாகக் குழந்தை பெற்றுக்கொள்ள எடுத்த முடிவு உடல் மற்றும் மனரீதியாகப் பல சவால்களை ஏற்படுத்தியதாகவும், பெண்கள் தங்களது குடும்பத் திட்டமிடல் குறித்து முன்கூட்டியே சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த சிகிச்சையின்போது 1,000க்கும் மேற்பட்ட ஊசிகளை எடுத்துக்கொண்டதாகவும், ஐந்து முயற்சிகளில் இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் கூறிய தேஜஸ்வினி, ஐந்தாவது முயற்சியிலேயே தனக்குத் தாயாகும் வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தனது அனுபவத்தைப் பகிர்வதன் மூலம், கருத்தரிப்புச் சிகிச்சைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes