General25 July 2026

கம்பளை பகுதியில் ஆணொருவரின் உடலம் மீட்பு

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆணொருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள மக்கள், உடலம் ஒன்று காணப்பட்டதையடுத்து கம்பளை காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து கம்பளை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.

உடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கம்பளை ஆதார மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தெடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes