International25 July 2026

6 பவுண் தங்க நகைக்காகப் பெண்ணின் உயிரைப் பறித்துவிட்டுத் திரைப்படம் பார்க்கச் சென்ற இளம் தம்பதி கைது!

இந்தியாவின் புதுச்சேரியில் 6 பவுண் தங்க நகைக்காகப் பெண் ஒருவரின் உயிரைப் பறித்துவிட்டு, அந்தக் குற்றத்தை மறைப்பதற்காகப் புதிதாக வெளியாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தைப் பார்க்கச் சென்ற இளம் தம்பதியினர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் புதுச்சேரி, லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மேலும், அவர் அணிந்திருந்த 6 பவுண் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் இளம் தம்பதியைக் கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பில் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ள லாஸ்பேட்டை காவல்துறையினர், அவர்களிடம் இருந்து, கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளைக் கைப்பற்றி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Related recommendation
Hiru TV News | Programmes