இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதாகவும், இதில் 850 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை நன்கொடைகளாக வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
“இலங்கையில் பாலி மொழி ஆய்வுகளை வலுப்படுத்துதல்” (Strengthening Pali Language Studies in Sri Lanka) என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் உதவிகள் நாட்டின் 25 மாவட்டங்களிலும் உட்கட்டமைப்பு, வீடமைப்பு, சுகாதாரம், வாழ்வாதாரம், புனர்வாழ்வு, கல்வி, விவசாயம், புதுப்பிக்கத்தக்க சக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை, இந்தியாவின் 'அயல்நாடு முதலில்' (Neighbourhood First) என்ற கொள்கை மற்றும் 'விஷன் மஹாசாகர்' திட்டத்தின் முக்கிய அங்கமாக இருப்பதாகவும் சந்தோஷ் ஜா குறிப்பிட்டுள்ளார்.
பெரும் நெருக்கடிகளின்போது இலங்கைக்கு முதலில் உதவ முன்வந்த நாடாக இந்தியா செயற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய 'டித்வா' புயல் மீட்பு நடவடிக்கைகள், பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தொற்றுக் காலங்களில் இந்தியா வழங்கிய உதவிகள் விரைவானதாகவும் சரியான நேரத்திலும் நிபந்தனையற்றதாகவும் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் நெருங்கிய அயல்நாடாக இந்தியா, வரலாற்று மற்றும் கலாசார உறவுகளைத் தாண்டி வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பிலும் உறவை விரிவுபடுத்தியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
Latest News
"தோல்விக்கு என் துடுப்பாட்டமே காரணம்!" – சிக்கந்தர் ரஸா
Local
26 July 2026
நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்த வெப்பநிலை
Local
26 July 2026
இஷான் கிஷன் அதிரடி: 2ஆவது T20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!
Local
26 July 2026
இலங்கைக்கான இந்திய உதவி 7.5 பில்லியன் டொலரைக் கடந்தது!
Local
25 July 2026
கல்வி அமைச்சுப் பொறுப்பில் மாற்றம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
Local
25 July 2026
பெல்லன்வில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: 2 சந்தேகநபர்கள் கைது!
Local
25 July 2026
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச காலமானார்!
Local
25 July 2026
பெல்லன்வில துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Local
25 July 2026
ஜனாதிபதி மாளிகையில் வெளிநபர்கள் தங்கியுள்ளனரா? ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட விளக்கம்!
Local
25 July 2026
கலிபோர்னியாவில், பார்வையற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறிய ஆந்தை ஒன்று தற்போது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Local
25 July 2026