International26 July 2026

மலத்திலிருந்து மருந்து : இங்கிலாந்தில் புதிய மருத்துவச் சாதனை!

ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாத 'சுப்பர் பக்டீரியா' தொற்றுகளுக்கு எதிராக புதிய சிகிச்சை முறையாக "மல நுண்ணுயிர் உறையுறைகள்" (Poop Pills) பயன்படுத்தும் ஆய்வு இங்கிலாந்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சிகிச்சைக்காக, ஆரோக்கியமான நபர்களின் மலத்தில் உள்ள பயனுள்ள குடல் நுண்ணுயிரிகள் (Gut Microbiome) சுத்திகரிக்கப்பட்டு, உறையவைக்கப்பட்டு உறையுறை (Capsule) வடிவில் தயாரிக்கப்படுகின்றன.

இந்த உறையுறைகள், நோயாளிகளின் குடல் நுண்ணுயிர் சமநிலையை மீட்டெடுத்து, ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட ஆபத்தான பக்டீரியாக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆரம்பகட்ட மருத்துவ ஆய்வுகளில், இந்தச் சிகிச்சை நல்ல முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், இதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை முழுமையாக உறுதிப்படுத்த மேலும் விரிவான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, இந்த ஆய்வு வெற்றியடைந்தால், ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட தொற்றுநோய்களுக்கு எதிரான சிகிச்சைத் துறையில் இது முக்கிய முன்னேற்றமாக அமையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes