நாடளாவிய ரீதியில் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், அதற்கு எதிராகச் செயல்படும் தேசிய திறனை மேம்படுத்துவதற்கும், அமெரிக்கா உதவுவதற்கு முன்வந்துள்ளது.
அதற்கமைய, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவுடன் இணைந்து விசேட "பொது சுகாதார பூச்சி கட்டுப்பாடு மற்றும் நோய்க்காவி மூலம் பரவும் நோய்கள் ஒழிப்புத் திட்டத்தை" ஆரம்பித்துள்ளது.
அமெரிக்காவின் வெளிநாட்டு மனிதநேய, பேரிடர் மற்றும் குடிமக்கள் உதவி திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம், அமெரிக்க பசிபிக் இராணுவம் மற்றும் 18 ஆவது தியேட்டர் மெடிக்கல் கமாண்ட் ஆகியவற்றின் தடுப்பு மருத்துவம், பூச்சியியல், நோய் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த நுளம்பு ஒழிப்பு நிபுணர்கள், இலங்கை சுகாதார அதிகாரிகளுடன் தொழில்நுட்ப அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
கொழும்பை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம், டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்களை அழித்தல், பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளுதல் மற்றும் முன்னறிவிப்புகளின் அடிப்படையிலான தடுப்பு முறைகளை மேலும் வலுப்படுத்துதல் ஆகியவை முன்னெடுக்கப்படவுள்ளன.
இலங்கைக்கான அமெரிக்கத் தற்காலிக இராஜதந்திரப் பொறுப்பாளர் ஜேன் ஹோவெல் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், "இந்த கூட்டுறவானது தற்போதைய டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் வரவிருக்கும் பொது சுகாதார சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கும் இலங்கைக்கு ஒரு நிலையான பலத்தை வழங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவுடன் இணைந்து விசேட "பொது சுகாதார பூச்சி கட்டுப்பாடு மற்றும் நோய்க்காவி மூலம் பரவும் நோய்கள் ஒழிப்புத் திட்டத்தை" ஆரம்பித்துள்ளது.
அமெரிக்காவின் வெளிநாட்டு மனிதநேய, பேரிடர் மற்றும் குடிமக்கள் உதவி திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம், அமெரிக்க பசிபிக் இராணுவம் மற்றும் 18 ஆவது தியேட்டர் மெடிக்கல் கமாண்ட் ஆகியவற்றின் தடுப்பு மருத்துவம், பூச்சியியல், நோய் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த நுளம்பு ஒழிப்பு நிபுணர்கள், இலங்கை சுகாதார அதிகாரிகளுடன் தொழில்நுட்ப அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
கொழும்பை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம், டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்களை அழித்தல், பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளுதல் மற்றும் முன்னறிவிப்புகளின் அடிப்படையிலான தடுப்பு முறைகளை மேலும் வலுப்படுத்துதல் ஆகியவை முன்னெடுக்கப்படவுள்ளன.
இலங்கைக்கான அமெரிக்கத் தற்காலிக இராஜதந்திரப் பொறுப்பாளர் ஜேன் ஹோவெல் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், "இந்த கூட்டுறவானது தற்போதைய டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் வரவிருக்கும் பொது சுகாதார சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கும் இலங்கைக்கு ஒரு நிலையான பலத்தை வழங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
Latest News
ஆடிவேல் உற்சவம் - பொதுமக்கள், சாரதிகளுக்கு காவல்துறை விடுத்துள்ள அறிவுறுத்தல்
Local
27 July 2026
நீதவான்கள், நீதிபதிகள் மற்றும் நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்க அமைச்சரவை அனுமதி!
Local
27 July 2026
LPL ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு: ஜஃப்னா கிங்ஸ் அணி இணை உரிமையாளர் உள்ளிட்ட இருவரின் பிணை கோரிக்கை நிராகரிப்பு!
Local
27 July 2026
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!
Local
27 July 2026
தெய்வேந்திரமுனை விஷ்ணு ஊர்வல காவடி ஆட்டத்துக்கு அனுமதி: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!
Local
27 July 2026
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரச பணி நியமனங்களை செல்லுபடியற்றதாக்கி நீதிமன்றம் உத்தரவு!
Local
27 July 2026
அமெரிக்க ஈரான் தாக்குதல்கள் இடைநிறுத்தம்: உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்தது!
Local
27 July 2026
சட்டவிரோத வாகனப் பதிவு நடவடிக்கை: மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள முன்னாள் அதிகாரி கைது
Local
27 July 2026
நாட்டின் பல பகுதிகளுக்கும் கடற்பரப்புகளுக்கும் பலத்த காற்றுக்கான எச்சரிக்கை!
Local
27 July 2026
இலங்கை யாத்திரிகர்களுக்கான இலவச இந்திய விசா நடைமுறை மீண்டும் அமுல்!
Local
27 July 2026