லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜஃப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் உள்ளட்ட இரு சந்தேகநபர்களின் பிணை விண்ணப்பத்தை கொழும்பு பிரதம நீதவான் அஸங்க எஸ். போதரகம இன்று (27) நிராகரித்துள்ளார்.
கடந்த 24ஆம் திகதி சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.டபிள்யூ.எஸ். பெர்னாண்டோவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த நீதவான், பிணை கோரிக்கையை நிராகரித்து கட்டளையிட்டார்.
தனது சேவைபெறுநர்கள் இருவரும் நோய்வாய்ப்பட்டுள்ளதால் அவர்களைப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு சட்டத்தரணி தனது மனுவின் மூலம் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
எனினும், குறித்த கோரிக்கையை நிராகரித்த நீதவான், சந்தேகநபர்களை வரும் 31ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை இலங்கை காவல்துறையின் விளையாட்டுத் தொடர்பான தவறுகளைத் தடுக்கும் விசேட புலனாய்வுப் பிரிவு, நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது.
ஜஃப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளரான மஞ்ஜோட் கல்ரா மற்றும் இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தார் எனக் கூறப்படும் யுவராஜ் புஷ்பா ஆகிய இரு இந்தியப் பிரஜைகளுமே
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் மேலும் தகவல்களைத் தெரிவித்த புலனாய்வு அதிகாரிகள், 2026 LPL தொடரின் ஆட்ட நிர்ணயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே இவர்கள் இருவரும் சந்தேகநபர்களாகக் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்குவதற்குப் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தங்களது ஆட்சேபனையை பதிவு செய்தனர்.
கடந்த 24ஆம் திகதி சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.டபிள்யூ.எஸ். பெர்னாண்டோவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த நீதவான், பிணை கோரிக்கையை நிராகரித்து கட்டளையிட்டார்.
தனது சேவைபெறுநர்கள் இருவரும் நோய்வாய்ப்பட்டுள்ளதால் அவர்களைப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு சட்டத்தரணி தனது மனுவின் மூலம் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
எனினும், குறித்த கோரிக்கையை நிராகரித்த நீதவான், சந்தேகநபர்களை வரும் 31ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை இலங்கை காவல்துறையின் விளையாட்டுத் தொடர்பான தவறுகளைத் தடுக்கும் விசேட புலனாய்வுப் பிரிவு, நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது.
ஜஃப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளரான மஞ்ஜோட் கல்ரா மற்றும் இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தார் எனக் கூறப்படும் யுவராஜ் புஷ்பா ஆகிய இரு இந்தியப் பிரஜைகளுமே
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் மேலும் தகவல்களைத் தெரிவித்த புலனாய்வு அதிகாரிகள், 2026 LPL தொடரின் ஆட்ட நிர்ணயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே இவர்கள் இருவரும் சந்தேகநபர்களாகக் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்குவதற்குப் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தங்களது ஆட்சேபனையை பதிவு செய்தனர்.
Latest News
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் தீப்பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள அவசரநிலை
Local
28 July 2026
போருக்கும் சமாதானத்துக்கும் மத்தியில் ஈரானின் புதிய எச்சரிக்கை
Local
28 July 2026
மீண்டும் தலைதூக்கும் அபாயத்தில் எய்ட்ஸ் நோய்: ஐ.நா எச்சரிக்கை!
Local
28 July 2026
கடும் வெப்பத்தால் பிரான்ஸ் வனவிலங்குகளுக்கு நேர்ந்த கதி!
Local
28 July 2026
சுட்டெரிக்கும் கடும் வெப்ப அலை - 40 பாகை செல்சியஸைக் கடக்கும் வெப்பநிலை
Local
28 July 2026
காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு: 15க்கும் மேற்பட்டோர் காயம்
Local
28 July 2026
சவூதி அரேபியா மீதான ஆளில்லா வானூர்தி தாக்குதல்: ஓமான் அரசு கடும் கண்டனம்
Local
28 July 2026
ஜெருசலேமிற்கு கிழக்கே புதிய இஸ்ரேலிய குடியிருப்பு : வெளியான தகவல்
Local
28 July 2026
கரப்பான் பூச்சிக்கு பிறகு E20 : அடுத்தடுத்து வரும் புதிய அமைப்புகள் காரணம் என்ன?
Local
28 July 2026
ஈரான் மோதலில் 600க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயம்
Local
28 July 2026