நீதிபதிகள் மற்றும் நீதியரசர்களின் ஓய்வு வயது வரம்பை அதிகரிப்பது தொடர்பான தீர்மானத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது, சர்வஜன வாக்கெடுப்பு கட்டாயமாக அவசியமான விடயங்கள் தொடர்பில் அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் தெளிவாக சில பிரிவுகளை உள்ளடக்கியிருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி, அரசியலமைப்பின் 1, 2, 3, 6, 7, 8, 9, 10, 11, 30(2) மற்றும் 62(2) ஆகிய பிரிவுகளுக்கே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என அவர் தெரிவித்தார்.
எனினும், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கோ அல்லது நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதற்கோ சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அரசியலமைப்பின் எந்தப் பிரிவிலும் குறிப்பிடப்படவில்லை என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
Latest News
பெற்றோர்களைப் பதற வைக்கும் செய்தி : 7,000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று
Local
30 July 2026
ஆகஸ்ட் 12 முழு சூரிய கிரகணம்: நேரலை செய்கிறது நாசா!
Local
30 July 2026
'ஜனநாயகன்' உலகளவில் ரூ.255 கோடிக்கும் மேல் வசூல் – 7 நாட்களில் புதிய சாதனை
Local
30 July 2026
நாமல் மீதான வழக்கு ஒத்திவைப்பு
Local
30 July 2026
கனகராயன்குளம் பகுதியில் விபத்து- இரு இளைஞர்கள் உயிரிழப்பு!
Local
30 July 2026
தனுஷின் அரசியல் வருகை? – வாழ்த்து தெரிவித்து பார்த்திபன் பதிவிட்ட நெகிழ்ச்சி பதிவு!
Local
30 July 2026
2026 உலகக் கிண்ணக் செம்பியன்ஷிப் தொடர்: அர்ஜென்டினா அணி மீது ஒழுங்கு நடவடிக்கை
Local
30 July 2026
நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் நிறைவடையும் தருவாயில்!
Local
30 July 2026
500 அடி உயரத்திற்குப் பாயும் எரிமலைக் குழம்பு : ஹவாயில் தீவிரமடையும் இயற்கைச் சீற்றம்!
Local
30 July 2026
ஈரான் மீது ‘கடுமையான தாக்குதல் அலை’: அமெரிக்கா அறிவிப்பு
Local
30 July 2026