International29 July 2026

நள்ளிரவில் லிப்ஸ்டிக் போட்டதால் விவாகரத்து - நீதிமன்றம் சொன்ன அதிரடி பதில்!

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போது, கணவர் முன்வைத்த காரணம் தொடர்பாக ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் முக்கியக் கருத்தை வெளியிட்டுள்ளது.

வழக்கில், தனது மனைவி மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி கணவர் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதற்கான காரணமாக, தனது மனைவி நள்ளிரவு 2 மணியளவில் காஜல் மற்றும் உதட்டுச்சாயம் (லிப்ஸ்டிக்) பயன்படுத்துவதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

எனினும், நள்ளிரவில் காஜல் மற்றும் லிப்ஸ்டிக் பயன்படுத்துவது மட்டுமே ஒருவரை மனநலப் பிரச்சினை கொண்டவர் எனக் கருதுவதற்கு போதுமான ஆதாரமாக அமையாது என்று ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், மனநலக் குறைபாடு தொடர்பான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு உரிய மருத்துவ ஆதாரங்களும் சட்டரீதியான சான்றுகளும் அவசியம் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes