இலங்கை நாடாளுமன்றத்தின் டிஜிட்டல் அமைப்புகளை இலக்குவைத்துச் இணையவழி ஊடுருவல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அபாயங்கள் காணப்படுவதாக, நாடாளுமன்றத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த செயற்பாட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவினால் (SLCERT) நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டறிக்கையை மேற்கோள் காட்டி இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் சைபர் பாதுகாப்பு தொடர்பில் 56 பகுதிகள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், அதில் 46 பகுதிகள் மிக உயர் மட்ட அபாயக் காரணியைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் அனுமதி பெறப்படாமல் டிஜிட்டல் அமைப்புகளுக்குள் பிரவேசித்தல், உணர்திறன் மிக்கத் தகவல்களைத் திருடுதல், நிறுவனத்தின் செயற்பாடுகளுக்குத் தடை ஏற்படுத்துதல் மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தளங்களை ஊடுருவிச் சிதைப்பதன் மூலம் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தல் போன்ற தீங்கிழைக்கும் ஆபத்துகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
எனவே, இந்தப் பாதுகாப்புப் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் உடனடி அவதானம் செலுத்தி, உரிய தீர்வுகளை முன்னெடுக்குமாறு கணக்காய்வுப் பரிசீலனையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் 2025 ஆண்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவினால் (SLCERT) நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டறிக்கையை மேற்கோள் காட்டி இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் சைபர் பாதுகாப்பு தொடர்பில் 56 பகுதிகள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், அதில் 46 பகுதிகள் மிக உயர் மட்ட அபாயக் காரணியைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் அனுமதி பெறப்படாமல் டிஜிட்டல் அமைப்புகளுக்குள் பிரவேசித்தல், உணர்திறன் மிக்கத் தகவல்களைத் திருடுதல், நிறுவனத்தின் செயற்பாடுகளுக்குத் தடை ஏற்படுத்துதல் மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தளங்களை ஊடுருவிச் சிதைப்பதன் மூலம் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தல் போன்ற தீங்கிழைக்கும் ஆபத்துகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
எனவே, இந்தப் பாதுகாப்புப் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் உடனடி அவதானம் செலுத்தி, உரிய தீர்வுகளை முன்னெடுக்குமாறு கணக்காய்வுப் பரிசீலனையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் 2025 ஆண்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Latest News
இறந்துவிட்டதாக நினைத்த மகன் உயிருடன் வந்த தருணம்... தாயின் கண்ணீர்ச் சந்திப்பு!
Local
31 July 2026
10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் கொள்ளையடித்த எலி
Local
31 July 2026
பிறரின் பயணப் பைகளை எடுத்துச் செல்ல வேண்டாம் – சுங்கத் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
Local
31 July 2026
அமித் ஷா உடனடியாக பதவி விலகுமாறு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் அதிரடி கோரிக்கை!
Local
31 July 2026
போயஸ் கார்டனில் சொந்த வீடு... இன்று முதியோர் இல்லத்தில் ஆதரவின்றி நடிகர் மோகன் சர்மா! நெஞ்சை உருக்கும் சோகம்!
Local
31 July 2026
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?
Local
31 July 2026
2 வயதில் நாம் செய்த தவறு... 60 வயதில் மறதி நோயை உருவாக்குமா? பரபரப்பு ஆராய்ச்சி முடிவுகள்!
Local
31 July 2026
பிரோட் பீக் மலையில் பனிச்சரிவு - நிர்மல் புர்ஜா உள்ளிட்ட 10 வீரர்கள் மாயம்!
Local
31 July 2026
கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைகளில் தாமதம்
Local
31 July 2026
ஆடிவேல் தேர் திருவிழாவை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!
Local
31 July 2026