நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மாலபேயில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் பணிகள் 85 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவடைந்துள்ளன.
கடுவலை - மாலபே பகுதியில் அமைந்துள்ள இந்த திட்டம், 20 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பைக் கொண்டுள்ளது.
இதில் 920 சதுர அடி பரப்பளவு கொண்ட 128 வீடுகளும், 700 சதுர அடி பரப்பளவு கொண்ட 128 வீடுகளும் அடங்கலாக மொத்தம் 256 வீடுகள் உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதிலும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன.
பின்னர், உரிய ஒப்பந்தக்காரர்களுடன் நகர அபிவிருத்தி அதிகாரசபை புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொண்டதையடுத்து, 2025 ஆம் ஆண்டில் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
4,375 மில்லியன் ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தின் கீழ் உருவான வீடுகளை, இந்த ஆண்டின் இறுதிக்குள் மக்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
Latest News
கொழும்பு ஐந்து லாம்பு சந்தியில் தீப்பரவல்: நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைவு
Local
03 August 2026
அஜித்தின் 64ஆவது படம் 'டேர் டெவில்': தயாரிப்பாளராக அவதாரமெடுக்கும் ஷாலினி!
Local
03 August 2026
நாவலப்பிட்டி - கினிகத்தேனை வீதியில் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்படுகிறது!
Local
03 August 2026
அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்... : அடுத்தடுத்து வரிசைகட்டும் 3 மாஸ் படங்கள்!
Local
03 August 2026
கோட்டாபயவின் மனு மீதான உத்தரவு செப்டம்பர் 22 க்கு ஒத்திவைப்பு!
Local
03 August 2026
கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையின் இன்றைய நிலவரம்!
Local
03 August 2026
ஹட்டனில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்து பெண் பலி!
Local
03 August 2026
மலையக மக்களுக்கு காணி உரிமை; புதிய ஒப்பந்தங்களில் சேர்க்க எதிர்பார்ப்பு - ஜனாதிபதி
Local
03 August 2026
20 வருட காதல் இரகசியம் சொன்ன சூர்யா
Local
03 August 2026
மேட்டூருக்கு பாயும் காவிரி நீர் : முதலமைச்சர் விஜய் "கடவுளின் குழந்தை..." - உற்சாகத்தில் பொதுமக்கள்!
Local
03 August 2026