International31 July 2026

மூன்று முக்கிய கடல் வழிகளில் ஏற்பட்ட தடையால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு ஆபத்து

ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து தொடர்ந்து முடங்கியுள்ளதுடன், சவுதி அரேபியாவைச் சேர்ந்த கப்பல்களை ஏமன் ஹூதி படைகள் அச்சுறுத்துவதால் எரிபொருள் கப்பல்கள் பாப் அல்-மந்தேப் (Bab al-Mandeb) நீர் வழியையும் தவிர்க்கத் தொடங்கியுள்ளன.

யுக்ரைன் தாக்குதல்கள் ரஷ்யாவின் ஏற்றுமதி உள்கட்டமைப்பைத் தாக்கியுள்ளன, இதன் காரணமாக வளைகுடா, செங்கடல் மற்றும் கருங்கடல் ஆகிய மூன்று முக்கிய வழிகள் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று வழிகளும் சேர்ந்து உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் கிட்டத்தட்ட கால் பகுதிக்கு இணையான வர்த்தக ஓட்டங்களை அச்சுறுத்துகின்றன, அதே நேரத்தில் கையிருப்பு பல வருடங்களின் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் மட்டும் இந்தப் பாதிப்புகள் தொடர்ந்தால், நான்காம் காலாண்டிற்குள் எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 120 டொலருக்கும் அதிகமாக உயரக்கூடும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) கணித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes