General01 August 2026

மிரிஸ்ஸ சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் தொடர்ந்தும் மருத்துவமனையில்!

மாத்தறை, மிரிஸ்ஸ சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 34 வயதுடைய நபர் ஒருவர் தொடர்ந்தும் மாத்தறை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இது இந்த வருடத்துக்குள் இலங்கையில் இடம்பெற்ற 22 வது துப்பாக்கித் தாக்குதலாக பதிவாகியுள்ளது.

உந்துருளியில் பயணித்த இருவர் இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு 'ரிவோல்வர்' ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
எனினும், இந்ம தாக்குதலுக்கான காரணம் என்னவென்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
Related recommendation
Hiru TV News | Programmes