General02 August 2026

இரத்மலானை துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னணியில் கஞ்சிபானை இம்ரான் ?

இரத்மலானை - கந்தவல வீதியில் நேற்று (01) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு, வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த 'கஞ்சிபானை இம்ரான்' என்பவரே பின்னணியிலிருந்து வழிகாட்டியுள்ளார் என்பது காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 'படோவிட அவிஷ்க' என்பவரைப் பயன்படுத்தி இந்தக் குற்றத்தைச் செய்ய தூண்டியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் இரத்மலானையைச் சேர்ந்த 'குடு அஞ்சு' என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பில் பணத்தை வசூலிக்கும் நபராகச் செயற்பட்ட 57 வயதான பிரியந்த என்ற நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உந்துருளியில் பிரவேசித்த இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes